டெல்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும்,  5,910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு சதவிகிதம் 2.60% ஆக உளள்ளது. நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 19 ஆக இருந்த நிலையில், நேற்று 6 ஆயிரத்து 809 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,62,445 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் மேலும், 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,007 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,034 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,80,464 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது  நாடு முழுவதும் 53,974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 2,13,52,74,945 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32,31,895 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,27,313 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,73,79,274 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.