சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னை யில் கொரோ தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  சென்னையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ள நிலையில், குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில், கொரோனாதொற்று காரணமாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைந்துள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை 1,39,720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை  1,24,891 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். அதே வேளையில் சிகிச்சை பலனின்றி, 2,826 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,003 ஆக உள்ளது. இவர்களில்,  61.23% ஆண்களும் 38.77% பெண்களும் உள்ளனர்.

சென்னையில் நேறறு(04.09.2020) மட்டும், 12,526 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா குணமடைந்தவர்கள் விவரம்:

1    திருவொற்றியூர்   4,070
2     மணலி        2,012
3     மாதவரம்        4,434
4     தண்டையார்பேட்டை   10,889
5     ராயபுரம்        12,571
6     திருவிக நகர்        9,491
7     அம்பத்தூர்        8,650
8     அண்ணா நகர்    14,162
9     தேனாம்பேட்டை    12,282
10     கோடம்பாக்கம்    14,208
11     வளசரவாக்கம்    7,815
12     ஆலந்தூர்        4,450
13     அடையாறு       9,540
14     பெருங்குடி        3,995
15     சோழிங்கநல்லூர்    3,385
16     இதர மாவட்டம்    2,937.

சென்னையில் மண்டலம் வாரியாக  சிகிச்சை பெறுவோர் விவரம்

1   திருவொற்றியூர்    324
2     மணலி        159
3     மாதவரம்        495
4     தண்டையார்பேட்டை    701
5     ராயபுரம்        944
6     திருவிக நகர்        894
7     அம்பத்தூர்        948
8     அண்ணா நகர்    1,368
9     தேனாம்பேட்டை    851
10     கோடம்பாக்கம்    1,366
11     வளசரவாக்கம்    893
12     ஆலந்தூர்        717
13     அடையாறு        1,005
14     பெருங்குடி         560
15     சோழிங்கநல்லூர்    484
16     இதர மாவட்டம்   294 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.