சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 24,405 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2,062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21லட்சத்து 72ஆயிரத்து 751ஆக அதிகரித்துள்ளது.  நேற்று ஒரேநாளில்  460பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,665ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் 2,062 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் இதுவரை 5,11,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று காரணமாக  சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,186 ஆகி உள்ளது

சென்னையில் நேற்று 68 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,291 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேவேளையில் நேற்று  3,595 பேர் குணம் அடைந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,75,781 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 28,186 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு