சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக மொத்த பாதிப்பு 8,40,360 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,23,518 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12,375 ஆக உயர்நதுள்ளது.  தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 4,467 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 51,882 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,62,28,801 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.  இன்று  கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 301 பேர் ஆண்கள், 193 பேர் பெண்கள். தமிழகத்தில் 254 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று மட்டும் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், 3பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,467.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 28 ஆயிரத்து 801.  இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 51 ஆயிரத்து 882.

சென்னையில் இன்ற தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 149. இன்று மட்டும் 159 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று எந்தவொரு உயிரிழப்பும் நிகழ்வில்லை.

பிற மாவட்டங்களில் 345 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதுபோல 358 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: