சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 1489 பேரும் கோவையில் 120 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 2,731 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,55,587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,805 பேர் உயிர் இழந்து 27,06,370 பேர் குணம் அடைந்து தற்போது 12,412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 1,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,66,801 பேர் பாதிக்கப்பட்டு 8,656 பேர் உயிர் இழந்து 5,48,357 பேர் குணம் அடைந்து தற்போது 1,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 120 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பிலும் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,53,755 பேர் பாதிக்கப்பட்டு 2,518 பேர் உயிர் இழந்து 2,50,311 பேர் குணம் அடைந்து தற்போது 926 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,76,239 பேர் பாதிக்கப்பட்டு 2,548 பேர் உயிர் இழந்து 1,72,566 பேர் குணம் அடைந்து தற்போது 1,175 பேர் சிகிச்சையில் உள்ளனர்.