டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில்  6,168 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில்,  58 பேர் பலியாகி உள்ளனர். 9,685 பேர் குணமடைந்து உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8  மணியுடன் முடிவடைந்த கடந்த  24 மணி நேரத்தில், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 6,168 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,42,507 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 1.94 சதவிகிதமாக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் 59,210 பேர்சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மேலும்  58 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,932 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 9685 பேர்குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,55,365 -ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,12,75,23,421 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 22,40,162  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.