டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,157 பேருக்கு கொரோனா பாதிப்பு 26 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 19,500  பேர் உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும்  3,157 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.   இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,82,345 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 26பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,869 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2,723பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,38,976 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 19,500பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 4,02,170பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை1,89,23,98,347 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.