சென்னை:  தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,03,607 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 5,75,47,850** சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 1489  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,49,534 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,784 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்  4 பேர் தனியார் மருத்துவமனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

அதே வேளையில் இன்று மேலும் 611 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,04,410 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 8340 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் மட்டும் 2920  பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் ஒருவர் பலியாகி உள்ளதுடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 8653 பேர் பலியாக உள்ளனர்.  சென்னையில் இன்று 682  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,63,656 ஆக உயர்ந்துள்ளது.  இன்று மட்டும் 148 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,52,083.

இன்றைய கொரோனா பாதிப்புமாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1
செங்கல்பட்டு 168
சென்னை 682
கோவை 75
கடலூர் 5
தருமபுரி 6
திண்டுக்கல் 4
ஈரோடு 35
கள்ளக்குறிச்சி 5
காஞ்சிபுரம் 35
கன்னியாகுமரி 31
கரூர் 5
கிருஷ்ணகிரி 11
மதுரை 11
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 5
நாமக்கல் 17
நீலகிரி 4

பெரம்பலூர் 3

புதுக்கோட்டை 3
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 17
சேலம் 30
சிவகங்கை 10
தென்காசி 2
தஞ்சாவூர் 13
தேனி 4
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 70
திருவண்ணாமலை 8
திருவாரூர் 4
தூத்துக்குடி 36
திருநெல்வேலி 28
திருப்பூர் 44
திருச்சி 21
வேலூர் 39
விழுப்புரம் 20
விருதுநகர் 1