டெல்லி: ரூ.2000 நோட்டுகள்  சட்டப்படி தொடர்ந்து செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.2000 நோட்டுக்கள் திருப்ப பெற்ற நிலையில், ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என தகவல்கள் பரவி வந்த நிலையில், ரூ.2000 நோட்டுகள்  சட்டப்படி தொடர்ந்து செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த பிரதமர் மோடி,  2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன.  இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட நோட்டுக்கு குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மே 19ம் தேதி  திடீரென  ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்தரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்பின், ஒரு வாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  இதனால்,  ரூ.2000 நோட்டு செல்லுபடியாகுமா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ரூ.2000 நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. டிச.,29ம் தேதி, ரூ.9,330 கோடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அதாவது, 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.