ர்தார்புரா

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி நிச்சயம்  வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறி உள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் இன்று 199 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் காலமானதால் அங்குத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்

பிறகு அசோக் கெலாட் செய்தியாளர்களிடம்,

”ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை ராஜஸ்தானில் இல்லை. எனவே காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள். எனவே அடுத்த ஐந்தாண்டுக்கு அவர்களை இங்குப் பார்க்க முடியாது. நடப்பது மோடியின் தேர்தல் இல்லை, மாநிலச் சட்டசபைத் தேர்தல்”. 

என்று தெரிவித்துள்ளார்.