PM Narendra Modi speaks to Russian President Vladimir Putin

உக்ரைன்:
ஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேசினார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புதின் பிரதமருக்கு விளக்கினார். ரஷ்யாவிற்கும், நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.