சென்னை

தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலத்தை நீட்டித்துள்ளார்.

தமிழகத்தின் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.  இங்கு பிச்சுமணி துணை வேந்தராக உள்ளார்.  இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

ஆனால் இன்று வரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு  புதிய துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை.  இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவின்படி தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பலகலைக்கழக துணை வேந்தர் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளார்.  புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இந்த நீட்டிப்பு தொடர உள்ளது.