மும்பை:

பிறந்து 6 நிமிடங்களில் ஒரு பெண் குழந்தைக்கு ஆதார் எண் கிடைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் 12.03 மணிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் என பெற்றோர் பெயர் சூட்டினர். பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர்.

இந்நிலையில், 12.09 மணிக்கு ஆன்லைன் மூலம் இந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் எண்ணும் கிடைத்துள்ளது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ண கேம் தெரிவித்தார். ‘‘இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டில் பிறந்த ஆயிரத்து 300 குழந்தைகளும் ஆதார் எண் பெறப்பட்டுள்ளது’’ என்றார் அவர்.