சென்னை
நேற்றிரவு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

நேற்று இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லக் கூடிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பது. இதில் 72 பேர் பயணம் செய்யக்கூடிய மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்றில் ஏசி வேலை செய்யவில்லை.
எனவே ரயிலை இயக்க விடாமல் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தினர். மேலும் பயணிகள் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு ஏ.சி. சரி செய்யப்பட்டு 1½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
Patrikai.com official YouTube Channel