Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

நிவர் புயல் எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை சாலை உள்பட கடற்கரை சாலைகளை மூட காவல்துறை உத்தரவு…

Nov 25, 2020
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை உள்பட பல்வேறு கடற்கரை சாலைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து,  கடற்கரை சாலைகளில் வாகனங்கள் செல்லவும்  தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மேலும் தீவிரம் அடைந்து  அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,  கடற்கரையோர ஊர்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.   கடலூர் மாவட்டத்தில் குடிகாடு, சித்திரைப்பேட்டை, ஐயம்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் வாழும் மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில்,  சென்னையிலும், கடற்கரை பகுதிகளில் வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை  மெரினா கடற்கரை,  காமராஜர் சாலை, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், எண்ணூர் நெடுஞ்சாலை உள்பட கடற்கரை சாலைகள் மூட சென்னை காவல்துறை ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.
நிவார் சூறாவளி கடலோரப் பகுதிகளைக் கடக்க வாய்ப்புள்ளதாலும், புயல் கரையை கடக்கும் போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் சென்னை காமராஜ் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தம் செய்யப்பட்டு கடற்கரை சாலைகளில் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

நிவர் புயல்: திமுகவினர் களமிறங்கி உதவ ஸ்டாலின் வேண்டுகோள்…
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியது…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer