karth1
நாடாளும் மக்கள் கட்சித்தலைவர் கார்த்திக், சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’நாடாளும் மக்கள் கட்சி, அனைந்திந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மக்கள் மாநாடு கட்சி, தமிழ் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது. புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணிக்கு ‘விடியல் கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். கூட்டணிக்காக காத்திந்து காத்திருந்து, கடைசியில் அவர்கள் சின்னத்திலேயே போட்டியிடச் சொன்னதும் இந்த புதிய கூட்டணி முடிவை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.