சென்னை

மலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுவரை பல படங்களை நடிகர் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல்’ பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் கட்டணம் கட்டி விண்ணப்பிக்கலாம் என்று போலி விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. பலர் இந்த விளம்பரத்தை நம்பி பலர் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சி.இ.ஓ நாராயணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.  த்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை அடிப்படையில் கடலூரை சேர்ந்த புகழேந்தி மற்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் பல வாட்ஸ்அப் குழுக்கள் வைத்து டிரெய்டிங் ஆலோசகராகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்த குழுக்களில் பலர் பணத்தை இழந்ததால் அதைத் திருப்பி தரும் நெருக்கடி இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பணத்தை மீட்பதற்கு இவர்கள் போலியான விளம்பரம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்று பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி விளம்பரங்களைப் பரப்பி சுமார் மூவாயிரம் பேரிடம் ரூ.10 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் இவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.