மதுரை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை திருடியதாக பொய் புகார் கொடுத்த நிகிதா என்ற பெண் மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் மார்ச் 4-ம் தேதி ஆஜராகுமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையில், அஜித்குமார் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாலேயே உயிரிழந்தார் என்பதும், அவர் மீது நிகிதா கொடுத்த புகார் பொய் புகார் என்பதும் உறுதியாகி உள்ளது.
இந்த வழக்கு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “செய்யாத குற்றத்துக்காக ஒருவரை போலீஸார் அடித்தே கொலை செய்துள்ளனர். போலீஸாருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை காவலர் சிறையிலேயே இருக்கட்டும்” என்று கூறி, “பொய் புகார் அளித்த பெண் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என சிபிஐயிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், அஜித்குமார் காவல் மரண வழக்கை விசாரித்துவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி விசாரித்து, மார்ச் 4-ம் தேதி நிகிதா நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் கொலையில் சிபிஐ ’அதிர்ச்சி’ தகவல்
அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ…
[youtube-feed feed=1]கல்லூரி பேராசிரியை நிகிதா அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஆஜர்