இசை உரிமை யாருக்கு சொந்தம்… காசு கொடுக்காமல் காபிபேஸ்ட்… பாட்டா – மெட்டா… என்று இளையராஜா-வை வைத்து அனல் பறந்து கொண்டிருக்க இளையராஜாவோ மொரிசியஸ் கடற்கரையில் குளுகுளுவென காற்றுவாங்கிக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்ட இசைஞானி இளையராஜா தான் மொரிசியஸ் நாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தன்னுடன் மொரிசியஸ் நாட்டில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஸ்பூனால் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார்.