காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கஞ்சா வைத்து இருந்ததாகவும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
Patrikai.com official YouTube Channel