லிகுரியா :

லகமே சிறைப்பட்டு பூஜ்யமாய் இருண்டு போய்விடுமோ என்று நினைக்கும் நேரத்தில் தான், மனிதனின் படைப்பாற்றல் வெளிப்படும் என்பதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன.

இது நாள் வரை, தன் பக்கத்து வீட்டுக்காரனின் முகம் கூட தெரியாமல் வாழ்ந்துவந்த மக்களிடையே, கொரோனா வைரஸின் உபயத்தால் மீண்டும் மலர்ந்திருக்கிறது மனித காதல்.

 

இத்தாலியில், ஓபரா பாடகர்கள் தங்கள் வீட்டு பால்கனிகளிலிருந்து அக்கம் பக்கத்தது வீட்டிலுள்ளவர்களை மகிழ்விக்கின்றனர்.

சிலர் தங்கள் பால்கனிகளில் இருந்து மது கோப்பைகளை ஒரு குச்சியில் கட்டி பக்கத்து வீட்டு பால்கனி நண்பர்களுக்கு “சியர்ஸ்” சொல்லி உற்சாகமடைந்த நிகழ்வுகளும் நடந்துவருகிறது.

இத்தாலி நாட்டின் லிகுரியா நகரில் ஒரு வீட்டு மொட்டைமாடிக்கும் மற்றொரு வீட்டு மொட்டை மாடிக்குமாக டென்னிஸ் விளையாடி சில இளம் பெண்கள் பொழுதை கழிப்பது இன்னும் வேடிக்கையாக உள்ளது!