சென்னை: சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது என  பெருநகர சென்னை காவல்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் தொற்று பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, சென்னையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இ-பதிவு செய்யாதவர்கள் ஒரு  செக்டாரில் இருந்து மற்றொரு செக்டாருக்குள் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை நகரம் 348 வட்டங்களாக(Sector) பிரிக்கப்பட்டுள்ளது. இ-பதிவு ஆவணம் இல்லாமல் மே 18 முதல் ஒரு வட்டத்தில் இருந்து இன்னொரு வட்டத்திற்கு செல்ல முடியாது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.