சென்னை

நேற்றிரவு சென்னை மாநிலக் கல்லூரி விடுதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏராளமான சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் காமராஜர் சாலையில் அமைந்துள்ளயில், மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.நேற்று நள்ளிரவில் இந்த, விடுதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் இந்த பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரியில்லை என்றும், சமையலறை கான்ட்ராக்டரை மாற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களைக் காண கல்லூரி முதல்வர் நேரில் வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவ்ர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.