டில்லி,

மனில் ஐஎஸ்ஐஎஸ்  பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் டில்லி வந்தடைந்தார். அவர் பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏமன் நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு 18 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட கேரள பாதிரியார் டாம் உளுநாளில் (Father Tom Uzhunnalil) இன்று காலை டில்லி வந்தடைந்தார்.  இன்று காலை டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை, கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் ஏமனில் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக சேவை செய்து வந்தார். அவர்  ஐ.எஸ்ஐஎஸ், பயங்கரவாதிகளால்  கடந்த 2016ம் ஆண்டு  மார்ச் 4ம் தேதி கடத்தப்பட்டார். அவரை மீட்க கேரள அரசு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து மத்திய அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இதற்கிடையில், கடத்தப்பட்ட  கேரள மாநில பாதிரியாரை சிலுவையில் அறைந்து பயங்கரவாதி கள் கொலை செய்துவிட்டனர் என்று தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், . மத்திய கிழக்கு நாடுகள் உதவியுடன்  ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து பாதிரியார் டாம் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து  ஏமன் நாட்டின் ஏடன் நகரில் பாதுகாப்பாக தங்கி இருந்தார். அவர் இன்று காலை இந்தியா வந்தடைந்தார்.