டெல்லி

ரும் 27 அன்று காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து இதுவரை 40 கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வருகிற 27-ந்தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். எனவே இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது,