தனித்துவ கொரோனா வைரஸுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகள் ரஷ்யாவில் உள்ள செச்செனோவ், மாஸ்கோவின் முதல் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தால் முடிக்கப்பட்டுள்ளன.

கோவிட் -19 தடுப்பு மருந்து: தனித்துவ கொரோனா வைரஸுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகள் ரஷ்யாவில் உள்ள செச்செனோவ், மாஸ்கோவின் முதல் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தால் முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை டிரான்ஸ்லேசன் மருத்துவம் மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாடிம் தாராசோவ் உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஸ்பூட்னிக் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமாலி இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி தயாரித்த COVID-19 தடுப்பு மருந்தின் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் ஜூன் 18 அன்று தொடங்கியது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்கான தன்னார்வலர்களின் இரு குழுக்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்  என்று அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. முதல் குழு இன்னும் ஓரிரு நாட்களிளும், இரண்டாவது குழு ஜூலை 20 ஆம் தேதியும்  வெளியேற்றப்படலாம். செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஒட்டுண்ணி, வெப்பமண்டல மற்றும் வெக்டார் மூலம் பரவும் நோய்களின் நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் லுகாஷேவை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையில், மனிதர்களுக்கு வழங்கப்படும் போது தடுப்பு மருந்தின் பாதுகாப்பு தன்மையைச் சரிபார்க்க இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும், அது இப்போது வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மேலும், சந்தையில் ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளும் பாதுகாப்பாக உள்ளன என்றும் லுகாஷேவ் கூறினார். மேலும், தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் இந்த தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அதில் வைரஸுடன் தொற்றுநோயியல் சூழ்நிலையின் சிக்கல் மற்றும் தடுப்பு மருந்தின் உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

தனித்துவ கொரோனா வைரஸ் பரவலில் உலக நாடுகள் பாதிப்படைந்திருக்கும் இந்நிலையில், ஒரு கல்வி நிறுவனமாக செயல்படுவதை விட, செசனோவ் பல்கலைக்கழகம் தடுப்பு மருந்துக்கான  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாக உருவெடுத்துள்ளது என்று தாராசோவ் குறிப்பிட்டார். அவர், அறிக்கையின்படி, “டிரான்ஸ்லேசன் மருத்துவம் மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனம்” முன்கூட்டிய ஆய்வுகள், நெறிமுறை மேம்பாடு மற்றும் இந்த தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளுடன் பணியாற்றியுள்ளது.
இதற்கிடையில், ஆக்ஸ்போர்டின் தடுப்பு மருந்து மிகவும் திறன் வாய்ந்தது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டின் அஸ்ட்ராஜெனிகா மருத்துவ பரிசோதனைகளின் மூன்றாம் கட்டத்தில் இருப்பதால் விரைவில்  சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thank you: Financial express