மெக்சிகோ:

மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு கடற்கரையில் துலிம் விடுதிக்கு அருகில் புதிய நீர்வழிக் குகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

347 கி.மீ. நீளம் உள்ள இந்த குகை உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை என கருதப்படுகிறது. இக்குகையை மாயன் இன மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் 15-ம் நூற்றாண்டிற்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், வழிபாட்டு முறை போன்றவற்றை அறிய முடிகிறது.

‘‘கிரான் அக்குஃபெரா மாயா’’ என்ற ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த குகை கண்டறியப்பட்டுள்ளது. இது மிக அதிசய கண்டுபிடிப்பு என்ற கருத்து ஆராச்சியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.