ஆமதாபாத்.
ந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கபடியில் இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நாளை இரவு நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது இந்திய அணி.
நேற்று இரவு நடைபெற்ற அரை இறுதி போட்டியில் தாய்லாந்து அணியை பந்தாடி, இறுதி போட்டிக்கும் எளிதாக முன்னேறியது இந்திய அணி.
3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.  இதில், பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று இரவு இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.
ஒரு அணியில் ஈரானும், தென்கொரியாவும் மோதின. மற்றொரு அணியில் இந்தியாவும் தாய்லாந்தும் மோதின.

தாய்லாந்து வீரரை மடக்கும் இந்தியஅணி
தாய்லாந்து வீரரை மடக்கும் இந்தியஅணி

நேற்று இரவு 9 மணி அளவில் ஆரம்பமான  அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 36-8 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்திய அணியின் பராக்கிரமசாலியான வீரர்களுடன் நோஞ்சான் வீரர்கள் கொண்ட தாய்லாந்து அணியால் தாக்கு பிடிக்க முடியவில்லை. தாய்லாந்து வீரர்கள் இந்திய வீரர்களால் பந்தாடப்பட்டனர்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே நிலவியது. இறுதியில் 73-20 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு  அரையிறுதி போட்டியில் ஈரான் மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதின.
ஈரானும்-தென்கொரிய அணியும் விளையாடியபோது
ஈரானும்-தென்கொரிய அணியும் விளையாடியபோது

இதனால் முதல் பாதியில் தென் கொரியா அணி 13-11 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இருப்பினும் இரண்டாவது பதியில் சுதாகரித்து ஆடிய ஈரான் அணி 28-22 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.
இதனையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஈரானை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என  தெரிகிறது.
2 முறை சாம்பியனான இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தங்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.