டெல்லி

நாடாளுமன்றத்தில் பெண் எம் பி லவ்லி ஆனந்த் பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பாஜகவின் கூட்டணி கட்சியும் பீகாரின் ஆளும் கட்சியுமான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.பி. ஆக இருக்கும் லவ்லி ஆனந்த் . நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் மோடி மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியை மிகவும் பாராட்டி உள்ளார்.  இவ்விருவரின் கூட்டாண்மையில் நாடும், பீகார் மாநிலமும் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாக கூறினார்.

அவர்களின் ஆட்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இருவருக்கும் நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.