சியோல்:

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால பாராலிம்பிக் போட்டி  தென்கொரியாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிகள் நிறைவு பெற்றன.

கடந்த பிப்ரவரி மாதம் 9ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று 25ந்தேதி முடிவடைந்த நிலையில், பாராலிம்பிக் போட்டி தொடங்கியது. இந்த போட்டியும் முடிவடைந்துள்ளது.

தென்கொரியாவின் கேங்வான் மாகாணத்தில் உள்ள பியாங்சங் நகரில் கடந்த 9-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த போட்டியில்  49 நாடுகளை சேர்ந்த வீரர்- வீராக்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியின்போது, ரஷ்யாவை சேர்ந்த வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டது. அதன் காரணமாக, ரஷ்யா  ஒலிம்பிக் கமிட்டிக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது.

இதையடுத்து அந்நாட்டின் வீரர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர். மேலும், வடகொரியா, ஜார்ஜியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் முதன்முதலாக பாராலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்றன.

நேற்றுடன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. பியாங்சங் நகரில் நடைபெற்ற கோலாகல நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவின் போது அனைத்து நாட்டு வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

தொடக்க விழாவை போல இந்த முறையும் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுப்பில் கலந்துகொள்ள தடை விதிப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் ஒலிம்பிக் கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

நிறைவு விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகார்ப்பூர்வமாக ஒலிம்பிக் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதும் வானவெடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த காட்சியை அனைவரும் கண்டுகளித்தனர்.

இறுதியாக ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.

இந்த பாராலிம்பிக் போட்டியில், 13 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் அமெரிக்க முதலிடத்தை பிடித்தது.

அதைத்தொடர்ந்து ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் தனிப்பட்ட வீரர்களாக களமிறங்கியவர்கள் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தனர்.

மூன்றாவது இடத்தை  8 தங்கம், 4 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களை வென்று கனடா பிடித்தது.  பிரான்ஸ் நான்காவது இடத்தையும், ஜெர்மனி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.