கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியை வென்று, தொடரையும் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

முதலில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி, பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு, தொடக்கம் நினைத்த மாதிரி அமையவில்லை. அந்த அணியின் ஷனகா அடித்த 31 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள்.

இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எட்டியது இலங்கை அணி.

பின்னர், 156 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய விண்டீஸ் அணியில், பிராண்டன் கிங் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் தலா 43 ரன்களை அடித்தனர். ஆன்ட்ரே ரஸ்ஸல் 40 ரன்களை அடித்தார்.

இந்த 40 ரன்களை, வெறும் 14 பந்துகளில் பவுண்டரி எதுவும் அடிக்காமல், அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசி எடுத்து முடித்தார் ரஸ்ஸல்.

இறுதியாக, 17 ஓவர் முடிவில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்களை எடுத்து, போட்டியை வென்று, டி-20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது விண்டீஸ் அணி.