சென்னை,

ர்செல் மேக்சிஸ் வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த என்னை விசாரிக்காமல்,  கார்திக் சிதம்பரம்பரத்தை சிபிஐ தொல்லை செய்வது ஏன்? பா.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

மத்தியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியின்போது, ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு விவகாரத்தில்  கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ கார்த்தி சிதம்பரத்துக்கு. சம்மன் அனுப்பி சிபிஐ அலுவலகத்தில் நேற்று விசாரணை செய்தது.

மத்திய அரசின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து  விசாரணை என்ற பெயரில் கார்த்தி சிதம்பரத்தை அலைக்கழித்து வருகின்றனர். அவர் நாட்டை விட்டு ஓடி விடுவார் என லுக் அவுட் நோட்டீஸ் விநியோகித்தும் அசிங்கப்படுத்தி உள்ளது.  சிபிஐ கொடுத்து வரும் தொடர் நெருக்கடி காரணமாக கார்த்தி சிதம்பரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி  உள்ளார்.

இந்நிலையில், தனது மகனுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் தொடர் நெருக்கடி காரணமாக, சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், சிபிஐ என்னிடம் விசாரணை

இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள சிதம்பரம்,

தவறான தகவல் காரணமாக சிபிஐ என் மகனிடம் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்து வருகிறது. அப்போதைய அமைச்சரான என்னிடம்  விசாரணை செய்வதுதானே என்று கூறி உள்ளார்.