சென்னை: வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் சென்னை காவல்துறைமீது உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது. காவல்துறையினன் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், யாரை திருப்தி செய்ய காவல்துறை வேலை செய்கிறது என்று கேட்டதுடன், தாக்குதலுக்கு ஆளானவர்மீது எப்படி வழக்கு பதியப்பட்டது என கேள்வி எழுப்பியது.

சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் அருகே அக்டோபர் 7ஆம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் சென்ற கார் மோதியது. இதையடுத்து வண்டியை நிறுத்தி வழக்கறிஞர் ராஜிவ் காந்தி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, திருமாவுடன் வந்த, வி.சி.க.,வினர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தியை தாக்கி அவரது வாகனத்தையும் சாலையில் தள்ளி சேதப்படுத்தினர்.
இதனால், ராஜீவ்காந்தி தற்காப்புக்காக, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்த நிலையில், அதன் உள்ளே நுழைந்த விசிக ஆதரவு வழக்கறிஞர்கள் சிலர், சரமாரியாக தாக்கியதுடன், பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தினர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் விசிக தலைவர் திருமா பதில் கூறியதும் அவரது ஆணவத்தை வெளிக்காட்டியது.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மவுனம் காத்து வருகிறது. இது எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் இரு தரப்பு மீதும் வழக்குபதிவு செய்தது.
இதற்கிடையில், வழக்கறிஞர் தாக்கப்பட்ட ம்பவம் குறித்து நடவடிக்கை கோரி பார் கவுன்சில் இணைத்தலைவரான வழக்கறிஞர் கே. பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் காவல்துறையை கடுமையாக சாடினார்.
‘குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு தரப்பினர் மீதும் எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கேள்வி எழுப்பினார்.
‘இந்தச் சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த அரசியல் கட்சித்தலைவர் சம்பவத்தை கட்டுப்படுத்தாமல் பிரச்னையை தூண்டும் விதத்தில் செயல்பட்டாரா?
கட்சியினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர்’ என்றும் நீதிபதி சதீஷ் குமார் கேள்வி எழுப்பினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட முழுச் சம்பவமும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது,
தாக்குதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பே நடந்திருந்தும், குற்றவாளிகள் பார் கவுன்சில் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞரை கடுமையாகத் தாக்கியிருந்தும், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததைத் தவிர காவல்துறை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏன் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாரை திருப்தி செய்ய காவல்துறை இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை (Status Report) தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை (CCTV Footage) காவல்துறை உடனடியாக கைப்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அரசியல் கட்சியின் தலைவர், வன்முறையைத் தூண்டுவதற்குப் பதிலாக, குற்றச் செயல்களில் ஈடுபட்ட வர்களை தடுத்து நிறுத்தி அந்தத் தவறான நபர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.