மும்பை:
சாலையில் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து சச்சின் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான், இரவு நேரத்தில் மும்பை பகுதியில் காரில் வந்துகொண்டிருந்தபோது, சாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவர்களை கண்டதும் காரில் இருந்த இறங்கி அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.
அவர்களிடம் இருந்து பேட்டை வாங்கிய சச்சின் சில பந்துகளை அடித்து விளையாடினார். சச்சினின் திடீர் விசிட் காரணமாக அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். பின்னர் சச்சினுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.
இந்த வீடியோவை சஞ்சினின் நண்பர் வினோத் காம்ப்ளி வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
https://www.youtube.com/watch?v=kZNegcgSnQM&feature=youtu.be