சென்னை: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், தாங்கள் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம்  என சூளுரைத்தனர்.

நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு “ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சி”யை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் அரசியல் பிரசார பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 23ந்தேதி அன்று மாலை சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், அதிமுக, பாஜக உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு  எடப்பாடி பழனிச்சமி தலைமையில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பழனிசாமி, “கடந்த 2 மாதத்துக்கு முன்பு, அதிமுக கூட்டணி அமைப்பதற்காக தடுமாறி கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். இன்றைக்கு பாஜக-வுடன், பாமக, அமமுக என பல கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கின்றன. மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன.

நானும் சரி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனும் சரி தெளிவாக இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். எப்போது கூட்டணிக்குள் இணைந்தோமோ அப்போதே கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டோம்.

வைகோவைபோல் எந்த தலைவரும் திமுக-வை விமர்சித்திருக்க முடியாது. இன்று அவர் திமுக கூட்டணியில் இருக்கிறார். காங்கிரஸ் கொண்டுவந்த எமெர்ஜென்சி, மிசா சட்டத்தால் சிறைக்குச் சென்று துன்பப்பட்டதாக திமுக கூறியது.

இப்படிப்பட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது எங்களுக்குள் எந்த மனவருத்தமும் கிடையாது. ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை தொடர்வது தான் எங்களது  நிலைப்பாடு. அதற்கேற்ப ஒன்றாக இருந்து செயல்படுவோம்” என்றார்.

டிடிவி.தினகரன் பேசுகையில், “எனக்கும் பழனிசாமிக்கும் இடையே இருப்பது ஒரு கூட்டுக் குடும்பப் பிரச்சினை. எங்களைச் சேர்க்க மத்திய அமைச்சர் அமித் ஷா 2021-ம் ஆண்டே முயற்சி செய்தார். அப்போது முடியாமல் போய்விட்டது. 2026-ல் பிரதமர் மோடி, என்னையும் பழனிசாமியையும் ஒன்றாக இருந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு உதவி செய்ய வேண்டும், கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இது நடந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. அப்போதே நான் ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு பழனிசாமியும் ஒப்புதல் அளித்தபின் கூட்டணியில் இணைந்திருக்கிறோம். இதில் அச்சுறுத்தலோ, அழுத்தமோ யாருக்கும் இல்லை.

2017 ஏப்ரல் வரை எப்படி இருவரும் அண்ணன் – தம்பியாக இருந்தோமோ, அதுபோல் ஒன்றிணைந்து விட்டோம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம்” என்றார்.

நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு “ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சி”யை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இன்றைய தினம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்திய திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி.

அதிமுக தலைமையிலான நம் வெற்றிக் கூட்டணியின் சார்பில் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, இன்றைய நமது கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம், ஆளுங்கட்சி திமுக-வை ஆட்டம் காண வைத்துள்ளதை ஆணித்தரமாக எடுத்துரைத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,   “திமுக ஆட்சி என்றாலே அது ஒரு பூஜ்ஜியம் ஆட்சி” என்ற உண்மையை உரக்கச் சொன்ன பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாசுக்கும்,   “மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியை அகற்றி, மீண்டும்  அம்மாவின் ஆட்சி அமைய அம்மாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைந்து அயராது உழைக்க வேண்டும்” என்று உரைத்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர், அன்புச் சகோதரர் டிடிவி தினகரனுக்கும், 
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறப்பித்த ஜிகே வாசன்., ஜான் பாண்டியன்,  ஜெகன்மூர்த்தி, பாரிவேந்தர், மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்பை சார்ந்த தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில்   பார்த்து அலறிப் போய் விட்டார் போல மு.க.ஸ்டாலின்.
உடனே எக்ஸ் தளத்தில் தனது புலம்பலை ஆரம்பித்துவிட்டார். “அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும்” என்பார்கள். ஆனால், நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு “ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி”யை நடத்திவிட்டு, இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம். வரும் சட்டமன்றத் தேர்தலில் அமையவுள்ள அதிமுக  அரசு, நமது மாநிலத்தின் நியாயமான தேவைகளை மத்திய அரசிடம் உரிமையோடு கேட்டுப் பெறும்.
மத்தியில் உள்ள NDA அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும். “மதுரை மெட்ரோ எங்கே? கோவை மெட்ரோ எங்கே?” என்று வாய்கிழிய கேட்கும் நீங்கள், எதற்காவது ஒழுங்கான ஆவணங்களை, அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்பித்தீர்களா? இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?
நீங்கள் தான் ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் ஆச்சே… உங்கள் அதிகாரிகளிடம் இதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், எதற்காக வெறும் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என எல்லாவற்றையும் கொடுத்த தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஏமாற்றி நீங்கள் நடத்திய #FraudModel_திமுகஆட்சி-யைக் கண்ட பிறகு, நீங்கள் எத்தனை தகிடுத்தத்தங்கள் போட்டாலும், இனி #தமிழ்நாடு_ஏமாறாது ! குடும்ப ஆட்சியை, ஊழல் ஆட்சியை, மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த விடியா ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம். மக்களின் எண்ணத்தை ஈடேற்ற அமைந்ததே அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி!
எங்கள் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தைக் கண்டு இப்படி பயந்துவிட்டீர்களே மு.க.ஸ்டாலின்,  இது தொடக்கம் தான்… Lot more to c
ome! மாண்புமிகு அம்மா அவர்கள் கூறுவது போல், நமது இலட்சியம் உயர்வானது! நமது பார்வை தெளிவானது! நமது வெற்றி உறுதியானது! நாளை நமதே! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]