சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இண்டல்போல் உதவியை நாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. காலை கேள்வி நேரம் முடிவடைந்ததும், காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்… நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் செய்கூலி, சேதாரமின்றி, நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றுத் தந்த மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.   நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்தால் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றவர்,  2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் . இதை நான் மமதையில் கூறவில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றியை தந்த மக்களுக்கு தலைவணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகள் போதவில்லை என்று கூறுவது தோல்வியை மறைக்கும் செயல். இந்த வழக்கில் நாங்கள் எதை மறைத்தோம், சிபிஐ விசாரணை கோருவதற்கு என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த 190 ஆறிவிப்புகளில் கடந்த 3 ஆண் டுகளில் 179 திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

காவலர்கள் விடுப்புக்கு விண்ணப்பம் செய்ய செயலி அறிமுகம் செய்துள்ளோம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 8 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்த வழக்கில் 268 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் சிலருக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளோம்.

பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து திருவிழாக்களும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.