சென்னை: தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம் என வடசென்னையில் நடைபெற்ற நிகர்ச்சியில், 712 குடியிருப்பு தாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 712 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 19) வழங்கினார். அவர்களுக்கு, எழும்பூர், திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட சந்திரயோகி சமாதி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியின்போது, குடியிருப்புகளை பெற்றவர்களுக்கான ஆணைகளை வழங்கியதுடன், அவர்களக்கு வழங்கி, பிரியாணி பரிமாறி அவர்களின் மனதை குளிர வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலிடன், ‘வடசென்னை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததை மாற்றி, வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். தென் சென்னை, மத்திய சென்னையை போல் வட சென்னையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வோம். வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.6400 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 29 மாவட்டங்களில் 49,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் அறிவித்த உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்று வோம்.
சொன்னதை செய்யக்கூடிய ஆட்சி, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளோம். எஞ்சிய திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. புதுமைப்பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை; புதுமைப்பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட எஞ்சிய திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
புதுமைப்பெண் திட்டத்தால் பலனடைந்த மாணவிகள் என்னை அப்பா என அழைக்கின்றனர்”
இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு உள்பட அதிகாரிகள், கட்சியினர் பங்கேற்றனர்.