சென்னை: வட சென்னை பகுதியான முக்கிய வழியான வியாசர்​பாடி பகு​தி​யில்  அமைக்கப்பட்டு வரும் கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி 40 சதவீதம் மட்​டுமே நிறைவடைந்து இருப்பதாகவும், நிலம் கையப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும்  மாநக​ராட்சி நிர்​வாகம்  தெரிவித்துள்ளது. விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடசென்னையின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று வியாசர்பாடி கணேசபுரம். இது வியாசர்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை போன்ற இடங்களுக்கு செல்லும் ஒரு முக்கிய பகுதியாகும்.  இங்குள்ள ரயில்வே பாலத்தில் மழை காலத்தின்போது தண்ணீர் தேங்குவதால் வாகன போக்குவரத்து முழுமையாக தடைபடும். இதனால் வடசென்னை மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, வியாபார்பாடி கணேசபுரம் பகுதியில், புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என கூறிய திமுக அரசு, அதற்கான நடவடிக்கை எடுத்து, பணிகளும் தொடங்கியது. இதனால், அந்த சாலை முழுமையாக மூடப்பட்டு உள்ளது.

இந்த  மேம்பாலப் பணிகள் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.  வடசென்னை மக்கள் கடந்த இரு ஆண்டுகளாக கடுமையாக அவதிப்பட்டு வருகின்றன. வியாசர்​பாடி கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி நீண்ட கால​மாக முடிக்​கப்​ப​டா​மல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கணேசபுரம் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை வடசென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், பணிகள் தாமதமாவதால், போக்குவரத்து சிக்கல்கள் தொடர்ந்து நிலவுகின்றன.  கணேசபுரம் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டால், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் மற்றும் வியாசர்பாடி கல்யாணபுரம் மேம்பாலம் வழியாக செல்ல வேண்டியுள்ளது.  கணேசபுரம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் மூலகொத்தளம் சந்திப்பு போன்ற சந்திப்புகள் வடசென்னையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இதையடுத்து, கணேசபுரம் மேம்பால பணிகளை  விரைந்து முடிக்க வேண்​டும் என்று வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்​முகம், சென்னை மாநக​ராட்சி மேயரிடம் அண்​மை​யில் மனு அளித்​திருந்​தார்.

இதற்கு பதில் அளித்து சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம், டி.கே.சண்​முகத்​துக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளது. அதில் , கணேசபுரம் மேம்​பாலத்​தின் தெற்கு பகு​தி​யில் தூண்​கள் அமைக்​கும் பணி முடிவுற்​று. தற்​போது வடக்கு பகு​தி​யில் ஆழ்​துளைக் கடைக்​கால்​கள் அமைக்​கும் பணி, சென்னை குடிநீர் வாரி​யத்​தின் குடிநீர் மற்​றும் கழி​வுநீர்க் குழாய்​களை மாற்​றியமைக்​கும் பணி மற்​றும் நிலம் கையகப்​படுத்​தும் பணி ஆகியவை நடை​பெற்று வரு​கின்​றன.

தற்​போது வரை 40 சதவீதம் பணி​கள் முடிவடைந்​துள்​ளன. வடக்கு பகு​தி​யில் நில எடுப்​புக்கு பின்​னரே அந்​நிலத்​தில், சென்னை குடிநீர் வாரி​யத்​தின் குடிநீர் மற்​றும் கழி​வுநீர் குழாய்​கள் மாற்​றியமைக்​கப்பட வேண்​டும். எனவே, நில எடுப்பு செய்​யப்​பட்ட நாளி​லிருந்து 6 மாத காலத்​துக்​குள் இம்​மேம்​பாலப் பணி முடிக்​கப்​படும்.

இவ்​வாறு பதில் கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

நில எடுப்பு பணி​களை எவ்​வளவு துரிதப்​படுத்த முடி​யுமோ, அந்த அளவுக்கு துரிதப்​படுத்தி மேம்​பாலப் பணி​களை வேக​மாக முடிக்க வேண்​டும் என்று வடசென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்​பு வலி​யுறுத்​தியுள்​ளது.