டில்லி

ருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மதியம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதியை, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4- ஆம் தேதி நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலுடன் ஒடிசா, அருணாசலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேச சட்டசபைகளுக்கான முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும்.

மேலும் ஆந்திரப் பிரதேசத்திற்கு மே 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் ஒடிசாவுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால் முதல்கட்ட தேர்தல் மே 13 ஆம் தேதி தொடங்கி  மே 20 ஆம் தேதி, மே 25 ஆம் தேதி மற்றும் ஜூன் 1 ஆம் தேதி அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ளது.

இன்று தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்து உள்ளது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.