மாஸ்கோ : 2014ல் குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் போது 110 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த, தான் உத்தரவு பிறப்பித்ததாக  ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் விரைவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய அதிபர்  விளாடிமிர் புதினின் தேர்தலுக்காக  ஆவணப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

அதில் பேசிய புதின், ” கடந்த 2014-ம் வருடம்  பிப்ரவரி 7-ம் தேதி குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் காத்திருந்தேன். அப்பொழுது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது. அதாவது,  உக்ரைனில் இருந்து துருக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டதாகவும், அதில் வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அதைக்கொண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் குளிர்க்கால ஒலிம்பிக்கை சீர்குலைக்க மர்மநபர்கள் திட்டமிட்டுள்ளனர், என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த விமானத்தில் 110 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். . ஆனால் குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் சுமார் 40 ஆயிரம் பேர் கூடியிருந்தனர்.

ஆகவே அந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். ஆனால் சில நிமிடங்கள் கழித்து, அந்த தகவல் தவறானது என்று எனக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆபத்தின்றி அந்த விமானம் துருக்கிக்கு புறப்பட்டு சென்றது” என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை அந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார் புதின்.