சென்னை: விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் கூடியதாலும், முகக்கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததாலும் தொற்று பரவலுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 14 முதல் 28 நாட்கள் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழகஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  விக்கிரவாண்டி தொகுதி  அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முத்தமிழ்ச்செல்வன் சமீப நாட்களாக கட்சியினருடன், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.