விக்ரவாண்டி: திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளஎ விக்ரவாண்டி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து, வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இன்று மாலை , இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியாகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்ரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார்.  அவர்  உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10ந்தேதி நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே வேட்புமனுதாக்கல்கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடத்தப்பட்டு, இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்பட பல்வேறு சிறிய கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், சுயேட்சையாக 40 பேர் என மொத்தம் 56 போட்டியிடுகின்றனர்.  அவர்களில் 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களில் யாராவது திருப்பப் பெற விரும்பினால் இன்று மாலை அவகாசம் உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலைஅதிமுக புறக்கணித்துள்ள நிலையில்,  அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.