கோவை:  “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்  என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு அரசியல் அனாதையானா மூத்த தலைவர் தவெகவில் அடைக்கலம் தேடிய நிலையில், அடுத்த முதல்வர் விஜய்தான் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

50ஆண்டுகாலம் தன்னை வளர்த்து, செழிப்பாக்கிய கட்சிக்கு எதிராக செயல்பட்ட செங்கோட்டையன், அங்கிருந்து நீக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜயின் தவெகவில் இணைந்து, பதவி பெற்ற நிலையில்,  வரும் 2026-ல் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது உறுதி என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

த.வெ.க.,வில் இணைந்து, மேற்கு மண்டல அமைப்பு செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், கோவை வந்த செங்கோட்டையனுக்கு, கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர்  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

த.வெ.க.,வின் தலைவர் விஜய், நாளைய தமிழகத்தின் முதல்வர் ஆவார். நேர்மையான, புனிதமான ஆட்சியை தர புறப்பட்டிருக்கிறார். ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும், அதை துாக்கி எறிந்து விட்டு மக்களின் சேவைக்காக துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார்.
எத்தனை தடைகள் வந்தாலும், மக்கள் சக்தியால் அதை உடைத்து, வரும் 2026-ல் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக அரியணையில் அமர்வார் என்று கூறிய செங்கோட்டையன், அவரது   வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும், மக்கள் சக்தியின் மூலம், தமிழகத்தில் ஒரு மாற்றத்தையும், ஒரு புதிய சமுதாயத்தையும் உருவாக்குவதற்கு, ஒரு நேர்மையான ஆட்சியை வழங்குவதற்கு, புனிதமான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு விஜய் புறப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த அணியில்  நான்  இடம்பெற்று இருக்கிறேன். என் உயிர் மூச்சு உள்ளவரை அவரை முதல்வராக்க பாடுபடுவேன். முதல் தலைமுறையில் எம்.ஜி.ஆர்., வழியில் நின்று பணியாற்றினோம். இரண்டாவது தலைமுறையில் ஜெ., வழியில் பணியாற்றினோம். மூன்றாவது தலைமுறையாக, விஜயை ஆட்சி கட்டிலில் அமர உறுதுணையாக இருப்போம். அந்த பயணத்தில், மக்கள் சக்தியோடு, 2026-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் அமர்வார் என்றும், மக்கள் சக்தியை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது எனவும் கூறினார்.
மேலும், மக்களுக்காகவே விஜய்யின் பயணம் இருப்பதாகவும், மக்கள் சேவைக்காகவே ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வருமானத்தை தூக்கி எறிந்துவிட்டு, புனித ஆடசியை தமிழகத்தில் கொண்டுவருவதற்காக துணிந்து இந்த இயக்கத்தை விஜய் உருவாக்கியிருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.


தவெகவின் எந்த கொள்கை பிடித்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், எம்ஜிஆர் ஆட்சி தொடங்கியபோது இப்படித்தான் கேட்டார்கள் என்றும், அதாவது அண்ணாயிஸம் என்றால் என்ன என்று கேட்டதாகவும், அதற்கு, ஒழுகாத வீடு, கிழியாத உடை, ஆறாத சோறு என்று சொன்னார். அதேபோல், இன்று விஜய், எல்லோருக்கும் வீடு வேண்டும், பொருளாதாரத்தில் உயர்த்தப்பட வேண்டும், எல்லோரும் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றும் மனித நேயத்தோடு அறிவித்துள்ளார் என்று  தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய  செங்கோட்டையன்,   இன்றைய அதிமுகவைத் தான் தான் விமர்சனம் செய்ததாகவும், அன்றைய ஆட்சியை, அதாவது எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை புனித ஆட்சி தான் நடைபெற்றதாகவும், அதற்குப் பின் தான் இந்த இரண்டு ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்று கூறியதாகவும் விளக்கமளித்தார்.

அவருக்கு பின்னால் மக்கள் இல்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்த செங்கோட்டையன், 9 முறை தான் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும், அதில் 3 முறை வாக்கு கேட்காமலேயே மக்கள் வெற்றி பெற வைத்தார்கள் என்பதால், மக்கள் என் பின்னால் இல்லை என்று அவர் சொல்லலாம், ஆனால் மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார். மேலும், ‘நான்‘ என்று ஒருவன் நினைத்தால், ‘தான்‘ என்று ஆண்டவன் காட்டிவிடுவார் என்று கூறிவிட்டுச் சென்றார் செங்கோட்டையன்.