
நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராயல்ஸ் காருக்கு வரி குறைப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ரோல்ஸ் ராய்ல்ஸ் கோஸ்ட் வகை காரை இங்கிலாந்திலிருந்து 2012 ஆம் ஆண்டு இறக்குமதி செய்துள்ளார் நடிகர் விஜய். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தத்துடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. அந்த அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நடிகர்கள் ரியல் ஹுரோவாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என்றும் நீதிமன்றம் கடுமையாக சாடியது.
சொகுசு கார் நுழைவு வரி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் விஜய்.
இந்நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே 20 % நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. ஒரு வாரத்தில் மீதி தொகையை செலுத்த தயார்’ என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. ஏற்கனவே 20 % நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. ஒரு வாரத்தில் மீதி தொகையை செலுத்த தயார்’ என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூலை 27-ந் தேதி, விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
“தனி நீதிபதியின் கருத்துகளை நீக்குவது பற்றி நான்கு வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும் , விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை, வணிக வரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் நுழைவு வரியாக, 40 லட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளதாக வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், 8 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்த விஜய், தற்போது மீதமுள்ள 32 லட்சம் ரூபாயையும் முழுமையாக செலுத்திவிட்டாராம்.