சென்னை:
‘விஜய் ஹசாரே கோப்பை’ கிரிக்கெட் போட்டிக்கு தமிழக அணியில் இருந்து விஜய் நீக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் தமிழக அணியில் விஜய் விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்று மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில் கலந்துகொள்ள விஜய் எஸ்எஸ்என் கல்லூரி மைதானத்திற்கு வரவில்லை.

தனக்கு தோளில் அடிபட்டு இருப்பதாக அன்று காலை 7.30 மணிக்கு பயிற்சியாளர் ஹரிஸ்கிரிஷை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். போட்டி தொடங்க ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருந்தது. ஏற்கனவே முதல் ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் காயம் காரணமாக விஜய் தான் முதல் ஆட்டக்காரராக களம் இறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

‘‘விஜய்க்கு ஏற்பட்டிருந்த தோல்பட்டை வலி குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தேர்வு குழு, அணி பிசியோதெரபிஸ்ட் என யாருக்கும் தெரியவில்லை. அதனால் மைதானத்திற்கு உரிய நேரத்தில் வராத காரணத்தால் அவரை ஹசாரே கோப்பை போட்டியில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.