ர்ணாகுளம்

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சரணடைந்த மார்ட்டின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தது பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவை இந்த சம்பவம் உலுக்கியுள்ள நிலையில், குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசியப் பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் தானாக சரணடைந்தார். அவர் மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான் தான் எனக் கூறிச் சரணடைந்துள்ளார்.

மார்ட்டின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமக்குச் சபையின் செயல்பாடு தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாகச் சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை என அவர் பேசு ம் வீடியோ வெளியாகியுள்ளது. காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.