வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம், ம் வெயில். இதில், பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தொலைபேசி, திருத்தம், செங்காத்து பூமியிலே, வானம் பார்த்த பூமியிலே ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் பிரியங்கா. நவீன் கணேஷ் இயக்கத்தில் கின்னஸ் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும், “தீயோருக்கு அஞ்சேல்” என்ற படத்தில் நடிக்கிறார்.
இது பற்றி, பிரியங்கா, “ கேரளாவில் பிறந்தாலும், என்னை நடிகையாக்கி பேரும் புகழும் கிடைக்கச் செய்தது தமிழ்த் திரையுலகம்தான். வெயில் படம் எனக்கு திருப்பு முனையாக இருந்தது. அதைத் தொடர்ந்து எனக்கு நல்ல கதையம்சமுள்ள படங்கள் அமையாததால் மலையாள படங்களில் நடித்து வந்தேன்.
இந்த நிலையில், இரண்டு தமிழ் படங்களில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. அதில் ஒரு படம் தான் தீயோருக்கு அஞ்சேல். இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் எப்படி விழிப்புணர்வுடனும், தைரியத்துடனும் இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படம் இது. எனக்கு நல்ல கதை அம்சமுள்ள படங்கள் தொடர்ந்து கிடைத்தால் நான் நடிப்பேன்” என்றார் உற்சாகமாக.
.