வடசென்னை படத்துக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியா மீண்டும் வெற்றிமாறனுடன் இணைய உள்ளார்.

பிசாசு-2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனந்த் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஹீரோயின் சப்ஜெக்டாக உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் 16 நாட்களுக்கான படபிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.