சென்னை

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

வரும் செப்டம்பர்  5 ஆம் தேதி நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘கோட்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழுவினர் தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இன்னும் சில நாட்களில் படத்தின் சிறப்பு பாடல் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த ஒரு நேர்காணலில் வெங்கட் பிரபு ,

“கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இருக்கும். என் திரை வாழ்வில் என்னுடைய பெரிய படமும் இதுதான். நிச்சயம் ரசிகர்களைக் கவரும்  அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படத்தை இயக்கவுள்ளேன். சிவகார்த்திகேயன் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்தப்பின் இத்திரைப்படத்திற்கான பணிகள் தொடரும்”

என்று கூறி உள்ளார்,