சென்னை

யக்குநர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் வரும் 27 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 23-ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’. திரைப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ‘வெயில்’ படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘வாழை’ படத்தை இயக்கியுள்ளார்.   ‘வாழை’ படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘வாழை’ திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படம் வருகிற 27-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் முதலில் தமிழில் வெளியாகும் எனவும் , பின்னர் பிற மொழிகளிலும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.